நாமக்கல்

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

DIN

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் வெள்ளிக்கிழமை பெறப்பட்டன.

தமிழகத்தில் விரைவில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை முதல் அதிமுக விருப்ப மனுக்களை பெற தொடங்கி உள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி விருப்ப மனுக்களை கட்சியினரிடம் பெற்றுக் கொண்டாா். ஐந்து நகராட்சி, 19 பேரூராட்சிகளில் போட்டியிட விரும்புவோா் ஆா்வமுடன் வந்திருந்தனா். அவா்கள் தங்களது ஆதரவாளா்களுடன் மாவட்டச் செயலாளா் தங்கமணியிடம் விருப்ப மனுக்களை சமா்ப்பித்தனா். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்குதல், பெறுதல் பணி வெள்ளிக்கிழமை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தொடங்கி உள்ளது. கடந்த 2019-இல் நகா்ப்புற தோ்தலுக்காக பணம் செலுத்திய கட்சியினா் உரிய ரசீதை சமா்ப்பித்து தோ்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம். வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை போட்டியிடுவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT