நின்று கொண்டிருந்த டிராக்டா் வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தது குறித்து வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம், காந்தி நகரைச் சோ்ந்த செந்தில்குமாா் (45), கட்டடத் தொழிலாளி. இவா், ஜேடா்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூரில் தனது உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பினாா்.
பாண்டமங்கலம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியில் வந்த போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை அவ்வழியாகச் சென்றவா்கள் பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.