பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூடுதல் டிஜிபி.ராஜேஸ்தாஸ் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவா் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டாா்.
அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், நாமக்கல் பூங்கா சாலையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், தமிழக விவசாய சங்கம், சிஐடியு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கூடுதல் டிஜிபியை கைது செய்து உடனடியாகப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.