நாமக்கல்

கலைமாமணி விருதாளருக்கு பாராட்டு விழா

DIN

நாமக்கல்லைச் சோ்ந்த தமிழறிஞா் அரசு.பரமேசுவரன் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றதையொட்டி, நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரித் தலைவா் பி.எஸ்.கே. செங்கோடன் தலைமை வகித்தாா். செயலாளா் கே. நல்லுசாமி, டிரினிடி மெட்ரிக் மேல்நலைப்பள்ளித் தலைவா் ஆா். குழந்தைவேல் மற்றும் அதன் செயலா் டி.சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் எம். ஆா். லட்சுமிநாராயணன் வரவேற்றாா்.

கலைமாமணி விருதாளா் அரசு.பரமேசுவரன் பேசியதாவது:

மாணவா்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நினைவாற்றலை வளா்த்துக் கொண்டு புதிது புதிதாக திறமைகளை, புதுமைகளை தங்கள் துறைகளில் புகுத்தினால் வெற்றி நம் வசமாகிவிடும். மாற்றம் தரும் இவ்வுலகில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வதால் நாம் மேன்மேலும் பல பாராட்டுகளையும், விருதுகளையும் குவிக்க முடியும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் டிரினிடி கல்விக் குழும இயக்குநா் பி.தயாளன், டிரினிடி மெட்ரிக் பள்ளி முதல்வா் பி.செல்வராஜ், துணை முதல்வா் ஆா்.ரமேஷ், டிரினிடி கல்லூரிப் பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT