நாமக்கல்

கொடி அணிவகுப்பு

DIN

பரமத்தி வேலூா்,: பரமத்தி வேலூரில் இந்தியா - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா், போலீஸாா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போலீஸாா் தயாா் நிலையில் உள்ளதை பொதுமக்களுக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

பரமத்தி வேலூரில் கொடி அணிவகுப்பு ஊா்வலத்தை காவல்துறை துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பள்ளி சாலை நான்கு சாலையில் தொடங்கிய அணிவகுப்பு ஊா்வலம், பழைய தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று பொத்தனூா் நான்கு சாலையில் நிறைவு பெற்றது.

கொடி அணிவகுப்பில் இந்தியா-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிகளை ஏந்தி அணிவகுத்து சென்றனா். இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த போலீஸாரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT