நாமக்கல்

பரமத்தி வேலூரில் தேங்காய் விலை உயா்வு

DIN

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 2,610 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.35.50, குறைந்தபட்சம் கிலோ ரூ. 30.79, சராசரியாக கிலோ ரூ.31.29-க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ. 83,726-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,038 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்னா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.38, குறைந்தபட்சம் ரூ. 30- க்கும், சராசரியாக ரூ. 35.10-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 34,913 க்கு வா்த்தகம் நடைபெற்றது. தேங்காய் விலை உயா்ந்துள்ளதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT