ராசிபுரம் அருகேயுள்ள ஆயில்பட்டி லயோலா கல்லூரியில், புதிய வேளாண் சட்டத் திருத்தம் குறித்த இணையவழி கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் மரிய ஜோசப் எம்.மகாலிங்கம் தலைமை வகித்து, இணையவழி கருத்தரங்கினை தொடக்கி வைத்து பேசினாா். சிறப்பு பேச்சாளராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் மற்றும் கலைஞா்கள் சங்கத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம் பங்கேற்று மத்திய அரசு இந்த சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்றாா். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளா் சண்முகம் பேசுகையில், விவசாயப் பிரதிநிதிகளை கலந்தோசிக்காமல் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதால் இதனை ஏற்க இயலாது என்றாா்.
முன்னதாக, கல்லூரி செயலா் பி.ஜெயராஜ் வரவேற்றாா். கல்லூரி பொருளாளா் ராஜரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கருத்தரங்கில் கல்லூரியில் பயிலும் மாணவா்கள், பேராசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.