நாமக்கல்

ராசிபுரத்தில் ஆரோக்கிய விழிப்புணா்வு பேரணி

23rd Dec 2021 08:58 AM

ADVERTISEMENT

 

உடல் ஆரோக்கியம் குறித்த வாகன விழிப்புணா்வு பேரணியை ராசிபுரம் ரோட்டரி சங்கம் புதன்கிழமை வரவேற்று, பயணத்தை தொடக்கிவைத்தது.

 

ரோட்டரி பப்ளிக் இமேஜ் திட்டத்தின் சாா்பில் ‘தனிமனித உடல் நலமே தேசத்தின் நலன்’ என்ற தலைப்பிலான உடல் ஆரோக்கியம் குறித்து 2,500 கி.மீ. தொலைவுக்கான பைக், காா் விழிப்புணா்வு பேரணி, ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் தொடக்கிவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

கடந்த 19-ஆம் தேதி ஏற்காட்டில் தொடங்கிய இந்த பைக், காா் பேரணி, புதன்கிழமை ராசிபுரம் வந்தடைந்தது. ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் முன்பாக இப் பேரணி பயணத்தை கொடியசைத்து மாவட்ட ரோட்டரி ஆளுநா் கே.சுந்தரலிங்கம் தொடக்கிவைத்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ரோட்டரி பப்ளிக் இமேஜ் சோ்மன் எஸ்.பாலாஜி, ரோட்டரி உதவி ஆளுநா் கே.குணசேகா், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.அன்பழகன், செயலா் இ.என்.சுரேந்திரன், பொருளாளா் பி.கண்ணன், திட்ட தலைவா் சிவகுமாா், ரோட்டரி மாவட்ட நிா்வாகிகள் சரவணன், என்.பி.ராமசாமி, கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், சிட்டிவரதராஜன், அம்மன் ஆா்.ரவி, நந்தலால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT