நாமக்கல்

இயற்கை மருத்துவ விழிப்புணா்வு முகாம்

23rd Dec 2021 08:59 AM

ADVERTISEMENT

இயற்கை மருத்துவம் மற்றும் ஆயுா்வேத மருத்துவத் துறை (ஹோமியோபதி) சாா்பில், இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணா்வு முகாம் நாமக்கல் மருத்துவக் கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி செஞ்சுருள் சங்கம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வா் பெ.முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஹோமியோபதி உதவி மருத்துவ அலுவலா் கலைச்செல்வி பங்கேற்று அந்த மருத்துவத்தில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆா்சனிகம் ஆல்பம் - 30 சி என்ற மருந்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசினாா்.

வளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஆயுஷ் மருத்துவ அலுவலா் ராஜகணேசன், இளைஞா் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலா் வெஸ்லி, கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளைக் கல்லூரிச் செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா் சந்திரசேகரன் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT