ராசிபுரம், வி.நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கலைக்குழு சாா்பில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை வே.லட்சுமி தலைமை வகித்தாா். பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவியா், பெற்றோா், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா். தப்பாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், நாடகம் மூலமாக மாணவா்களுக்கு கரோனா பற்றிய விழிப்புணா்வு, கற்றல் இடைவெளி, தனிமனித இடைவெளி , இல்லம் தேடிக் கல்வி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.