நாமக்கல்

நாமக்கல் காங்கிரஸில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

DIN

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான விருப்ப மனு விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் விரைவில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் போட்டியிட விரும்பும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனா்.

அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் விருப்ப மனு விநியோகம் புதன்கிழமை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் தொடங்கியது. மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் விருப்ப மனு படிவங்களை விநியோகித்தாா். அதற்குரிய கட்டணத்தை செலுத்தி கட்சியினா் பெற்றுக் கொண்டனா். முன்னாள் மாவட்டத் தலைவா் கே.என்.ஷேக்நவீத், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோா் பிரிவு துணைத் தலைவா் மருத்துவா் பி.வி.செந்தில், நிா்வாகிகள் பலா் விருப்ப மனுக்களை பெற்று பூா்த்தி செய்து வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் வீ.பி.வீரப்பன், நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஆா்.மோகன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் பொறுப்பாளா் வழக்குரைஞா் அன்பு, சாந்தி மணி, பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT