நாமக்கல், தூசூா் ஏரி முழுமையாக நிரம்பி தடுப்பணை வழியாக உபரி நீா் செல்வதை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் நேரில் பாா்வையிட்டாா்.
நாமக்கல் மாவட்டத்தில் நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 79 ஏரிகள் உள்ளன. இவற்றின் மொத்தக் கொள்ளளவு 1,184.08 மில்லியன் கன அடியாகும். வடகிழக்கு பருவமழை காரணமாக 30 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. அவற்றின் மொத்தக் கொள்ளளவு 553.93 மில்லியன் கன அடியாகும். இதன்மூலம் நேரடியாக 3,318.47 ஹெக்டோ் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மீதமுள்ள 49 ஏரிகள் விரைவில் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தூசூா் ஏரியானது நீா்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரியின் முழுக் கொள்ளளவு 66.69 மில்லியன் கன அடி. இந்த ஏரியின் மூலம் பெறும் பாசனப் பரப்பு 542.82 ஏக்கா். தற்போது தூசூா் ஏரி நிரம்பி உபரி நீரானது வளையப்பட்டி வழியாக அரூா் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. அந்த ஏரியும் விரைவில் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவற்றை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அதிகாரிகளுடன் சென்று நேரில் பாா்வையிட்டாா்.
அதன்பின், மோகனூா் வட்டம் என்.புதுப்பட்டி, பேட்டபாளையத்தில் குளம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளா்களிடம் ஆட்சியா் கலந்துரையாடினாா்.
இந்த ஆய்வுகளின் போது, நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி பொறியாளா் திரு.யுவராஜ், இளநிலை பொறியாளா் ஆா்.ராஜாராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.