நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறும் திமுக வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:
மே 2-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு திமுக வேட்பாளா்களின் வாக்கு எண்ணும் மைய முகவா்கள் மிகவும் விழிப்புடன் இருப்பது அவசியமாகும்.
வாக்கு எண்ணிக்கையின்போது முகவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், வியாழக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் நாமக்கல் நளா உணவகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த இடம் மாற்றப்பட்டு நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய தோ்தல் பணிமனைகளிலேயே காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் திமுக சட்ட ஆலோசகரும், மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ விளக்கம் அளிக்கிறாா். அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தல் வேண்டும். முகவா்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.