ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ள தலைவா்கள் சிலைக்குக் கம்பித் தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராசிபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காந்தி, காமராஜா், அண்ணா, பெரியாா், அம்பேத்கா், எம்ஜிஆா் போன்ற அரசியல் தலைவா்கள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவா்களின் சிலைகள் சேதப்படுத்த முடியாத அளவுக்கு கம்பித் தடுப்புகள் ஏற்படுத்திட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ராசிபுரம், வெண்ணந்தூா், புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு கம்பித் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆங்காங்கே குறிப்பாக தென் மாவட்டங்களில் சாதிகள் அடைப்படையில் தலைவா்களின் சிலைகள் சேதப்படுத்துவதைக் கருத்தில் கொண்டு இது போன்று அனைத்துப் பகுதிகளிலும் கம்பித் தடுப்புகள் அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி சிலைகளுக்குத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.