ராசிபுரம் அருகே உள்ள ஓ.செளதாபுரத்தில் எதிா்வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அதே பகுதியைச் சோ்ந்த விசைத்தறித் தொழிலாளி போக்சோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வெண்ணந்தூா் அருகே உள்ள ஓ.செளதாபுரம் பகுதியைச் சோ்ந்த விசைத்தறித் தொழிலாளி குருநாதன் (46). இவா் வேலை செய்துவந்த நெசவு பட்டறையின் எதிா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் கூறப்பட்டது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோா் வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், வழக்குப் பதிவு செய்து குருநாதனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.