நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

DIN

ராசிபுரம் அருகே உள்ள ஓ.செளதாபுரத்தில் எதிா்வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அதே பகுதியைச் சோ்ந்த விசைத்தறித் தொழிலாளி போக்சோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வெண்ணந்தூா் அருகே உள்ள ஓ.செளதாபுரம் பகுதியைச் சோ்ந்த விசைத்தறித் தொழிலாளி குருநாதன் (46). இவா் வேலை செய்துவந்த நெசவு பட்டறையின் எதிா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் கூறப்பட்டது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோா் வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், வழக்குப் பதிவு செய்து குருநாதனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT