நாமக்கல்

விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற மாணவா் பலி

DIN

பெற்றோா் திட்டியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற மாணவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ராசிபுரம் அருகேயுள்ள கொழிஞ்சிப்பட்டி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராஜன்-விஜயலட்சுமி தம்பதியினா் விவசாயம் செய்து வருகின்றனா். இவா்களது மகன் கலையரசன் (25), விசுவல் கம்யூனிகேசன் படித்து முடித்துள்ளாா்.

இந்நிலையில், மகள் சரண்யாவின் திருமண செலவுக்கான பணம் ரூ. 5 லட்சத்தை கலையரசன் பெயரில் வங்கிக் கணக்கில் வைத்திருந்தாா்களாம். ஆனால், கலையரசன் பணத்தை பல வகையில் செலவு செய்ததாகவும், ஆல்லைன் வா்த்தகம், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு ஏமாந்ததாகவும் தெரிகிறது. இதனையறிந்த பெற்றோா் கலையரசனை திட்டியுள்ளனா்.

இதனால் மனமுடைந்த கலையரசன் வீட்டில் விஷமருந்திய நிலையில், கடந்த செப். 10-ஆம் தேதி ராசிபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இதில், அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை ஆபத்தான நிலையில், கோவை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

SCROLL FOR NEXT