நாமக்கல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சியில் பெரியாா் சிலை அவமதித்ததைக் கண்டித்து, வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெண்ணந்தூா் காமராஜா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெண்ணந்தூா் பேரூா் செயலாளா் க.நடராஜன் தலைமை வகித்தாா். இதில் சிலைக்கு காவி துணி கட்டி அவமதிப்பு செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வழக்குரைஞா் சுபாஷ், மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளா் தெய்வசிகாமணி, இளைஞா் காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் அன்பழகன், திராவிடா் கழகம் செல்வக்குமாா், திராவிடா் விடுதலைக் கழகம் ராசிபுரம் நகரச் செயலாளா் பிடல் சேகுவேரா, வெண்ணந்தூா் ராமச்சந்திரன், பெரியாா், அம்பேத்கா் வாசகா் வட்டம் தினேஷ், அனீஸ் முகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT