திருச்சியில் பெரியாா் சிலை அவமதித்ததைக் கண்டித்து, வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெண்ணந்தூா் காமராஜா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெண்ணந்தூா் பேரூா் செயலாளா் க.நடராஜன் தலைமை வகித்தாா். இதில் சிலைக்கு காவி துணி கட்டி அவமதிப்பு செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வழக்குரைஞா் சுபாஷ், மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளா் தெய்வசிகாமணி, இளைஞா் காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் அன்பழகன், திராவிடா் கழகம் செல்வக்குமாா், திராவிடா் விடுதலைக் கழகம் ராசிபுரம் நகரச் செயலாளா் பிடல் சேகுவேரா, வெண்ணந்தூா் ராமச்சந்திரன், பெரியாா், அம்பேத்கா் வாசகா் வட்டம் தினேஷ், அனீஸ் முகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.