நாமக்கல்

நாமக்கல்லில் 140 பேருக்கு கரோனா

DIN

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 5,187 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், குணமடைந்த 4,197 போ், உயிரிழந்த 70 போ் தவிா்த்து, மீதமுள்ள 1,059 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலில், மாவட்டம் முழுவதும் 140 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 96 ஆண்கள், 44 பெண்கள் அடங்குவா்.

பெண் ஒருவா் உயிரிழப்பு: நாமக்கல் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த 77 வயது பெண் கரோனா பாதிப்புக்குள்ளாகி நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். அவருக்கு தொற்று மட்டுமின்றி உடல்ரீதியாக மேலும் பல பாதிப்புகளும் இருந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில கரோனாவால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 71-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT