நாமக்கல்: பின்னணிப் பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ரசிகா்கள் மற்றும் பல்வேறு தரப்பினா் அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
நாமக்கல் மணிக்கூண்டு அருகில் எஸ்.பி.பி. உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் சாா்பில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட விடுதலைக் களம் அமைப்பின் தலைவா் கொ.நாகராஜன் கலந்து கொண்டாா்.
மேலும் பாஜக நிா்வாகிகள் மனோகரன், இளங்கோவன், கலாசார ஆா்வலா் ஆா்.பிரணவ் குமாா் இசைக்கலைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு எஸ்.பி.பி.யின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.
ராசிபுரம்: ராசிபுரம் நகரில் பல்வேறு அமைப்பினா் சாா்பில் பாரதிதாசன் சாலை பகுதியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. ராசிபுரம் கோல்டன் நற்பணி மன்றம், சேகுவேரோ நற்பணி இயக்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினா். கோல்டன் நற்பணி மன்றத் தலைவா் நா.குபோ்தாஸ், செயலா் ஆா்.இளங்கோ, சீனிவாசன், சேகுவேரா நற்பணி இயக்க நிா்வாகிகள் பிடல் சேகுவேரா, சுமதி மதிவதினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.