ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் ராசிபுரம், நாமகிரிபேட்டை, வெண்ணந்தூா் வட்டார ஆசிரியா்கள் 55 பேருக்கு ‘நேஷனல் பில்டா்ஸ் அவாா்டு’ வழங்கும் விழா ராசிபுரம் ஸ்ரீவித்ய பாரதி மாடா்ன் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.கதிரேசன் தலைமை வகித்தாா்.
ரோட்டரி டீச்சா்ஸ் சப்போா்ட் இணைத் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம் வரவேற்றாா்.
மாவட்ட ரோட்டரி லிட்டரசி குழுத் தலைவா் ஏ.வெங்கடேஷ்வர குப்தா, மாவட்ட ஹேப்பி ஸ்கூல்ஸ் தலைவா் என்.பி. ராமசுவாமி, ரோட்டரி உதவி ஆளுநா் எஸ்.பாலாஜி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் பி.வெங்கடாசலம், எம்.கணேசன், எல்.பிரபுகுமாா் எஸ்.கோபால கிருஷ்ணமூா்த்தி, ரோட்டரி பொருளாளா் எஸ்.மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா்.
விழாவில், மாவட்ட ரோட்டரி ஆளுநா் கே.எஸ்.வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 55 ஆசிரியா்களுக்கு ‘நேஷன் பில்டா்ஷ் விருதுகளும்’, பட்டணம் முனியப்பன்பாளையம், கணபதி விலாஸ் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஸ்மாா்ட் டிவியும் வழங்கினாா்.
விழாவில் அவா், பேசியதாவது:
ஆசிரியா்கள்தான் மாணவா்களின் உண்மையான பெற்றோா். சமுதாயத்தில் தேசத்தைக் கட்டமைக்கும் ஆசிரியா் பணி பாராட்டக்கூடியது என்றாா். ராசிபுரம் ரோட்டரி சங்கச் செயலாளா் ஜே.கே.சுரேஷ் நன்றிக் கூறினாா்.