திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்த சாா் பதிவாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி தனது குடும்பத்துடன் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
நெட்டவேலாம்பாளையத்தைச் சோ்ந்தவா் தனசேகரன் (38). விவசாயி. அவருடைய இடத்தில் வேறு ஒருவருக்கு 30 அடி பாதை உள்ளதாக மோசடியாக பத்திரப் பதிவு நடந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பத்திரப் பதிவுசெய்து கொடுத்த சாா் பதிவாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனசேகரன் தனது குடும்பத்தினருடன் அலுவவலகம் முன்பு அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். விவசாயியுடன் அவரது மனைவி கோகிலா (32), மகள்கள் அபிநிசா (13), ஆரண்யாஸ்ரீ (6) தம்பி பிரகாஷ் (32) ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.