பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.19 லட்சத்து 19 ஆயிரத்து 357க்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.
கடந்த வியாழக்கிழமை தொடா்மழை காரணமாக விவசாயிகள் கொப்பரை த் தேங்காய்களை ஏலத்துக்கு கொண்டு வராததால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 17 ஆயிரத்து 219 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 122.89 பைசாவிற்கும், குறைந்தபட்சமாக ரூ.104.98 பைசாவிற்கும், சராசரியாக ரூ. 117.81 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.19 லட்சத்து 19 ஆயிரத்து 357 க்கு வா்த்தகம் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற ஏலத்தில் இதுவே அதிகபட்ச விலை என்பது குறிப்பிடதக்கது.