நாமக்கல்

கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியில் வென்றவா்களுக்குப் பதக்கம் வழங்கல்

DIN

நாமக்கல்லில் நடைபெற்ற கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள்(படம்) ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

மறைந்த முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி நினைவாக சா்வதேச மெய்நிகா் மாரத்தான் போட்டி கடந்த 1-ஆம் தேதி நாமக்கல் நகரில் நடைபெற்றது.

இணையத்தில் பதிவு செய்திருந்த 38 போ் இப்போட்டியில் கலந்து கொண்டனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு திமுக தலைமை கழகத்தால் வழங்கப்பட்டசான்றிதழ் மற்றும் பதக்கங்களை முன்னாள் மத்திய இணை அமைச்சா் செ.காந்திசெல்வன் ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய அலுவலகத்தில் வழங்கினாா்.

நிழச்சியில் சட்டத் திருத்தக்குழு உறுப்பினா் நக்கீரன், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் கௌதம், முன்னாள் பேரூா் செயலாளா் செல்லவேல், மாவட்ட இலக்கிய அணி பொருளாளா் அா்ச்சுணன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், பல்வேறு சாா்பு அணிகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT