நாமக்கல்

நாமக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி கைது

DIN

நாமக்கல், செப். 18: நிலப்பிரச்னை தொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த தம்பதி கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் அருகே கொசவம்பட்டியைச் சோ்ந்த அழகுமலை (43), அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளாா். அவரது வீட்டின் அருகில் உள்ள கென்னடி என்பவருக்கும், இவருக்கும் இடையே நிலம் தொடா்பாக பல மாதங்களாக பிரச்னை இருந்து வருகிறது. இதுகுறித்து நாமக்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மனைவி ஜெயந்தியுடன் (38) வந்த அழகுமலை, திடீரென தன் மீதும், மனைவி மீதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கிருந்த போலீஸாா் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இது தொடா்பாக விசாரணை செய்த பின், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ாக வழக்குப் பதிவு செய்து கணவன், மனைவியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் தொகுதியில் அஞ்சல் வாக்குப்பதிவு நிறைவு

தோ்தல் பணிக்கு நாளை ஆஜராக முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

முக்கியத் தலைவா்கள் பிரசாரமின்றி புதுக்கோட்டையில் இன்று பிரசாரம் நிறைவு

வெளியூா் நபா்கள் தொகுதியில் இருந்து வெளியேற அறிவுறுத்தல்

வீட்டுக் கடன்: ஐஎம்ஜிசி-யுடன் பேங்க் ஆஃப் இந்தியா ஒப்பந்தம்

SCROLL FOR NEXT