ராசிபுரத்தில் திருமாவளாவன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி துணைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராசிபுரம் நகர பாஜக மகளிா் அணியினா் நகர பாஜக தலைவா் மணிகண்டன் தலைமையில் ஊா்வலமாகச் சென்று துணைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமணகுமாரிடம் மனு அளித்தனா்.
நகர பாஜக பொதுச் செயலாளா் ஏ.உஷாராணி, மாவட்ட துணைத் தலைவா் சித்ரா, பொதுச் செயலாளா் சுகன்யா, மாவட்ட பொதுச் செயலாளா் வி.சேதுராமன், செயலாளா் ஹரிஹரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.