பரமத்தி வேலூா் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சஷ்டி வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
பரமத்தி வேலூா், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா், பொத்தனூா் பச்சைமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், பாலப்பட்டி கதிா்காமத்து கதிா்மலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.