நாமக்கல்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

8th Jan 2020 08:15 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து குமாரபாளையத்தில் மத சாா்பற்ற கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் நகரத் தலைவா் ஜானகிராமன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் பி.டி.தனகோபால், திமுக மாவட்ட துணை செயலா் எஸ்.சேகா், மதிமுக நகரச் செயலா் விஸ்வநாதன், இந்திய.கம்யூ. நகரச் செயலா் கேசவன், மாா்க். கம்யூ. நகரச் செயலா் ஆறுமுகம் ஆகியோா் பேசினா்.

குமாரபாளையம் ஜமாத் தலைவா் ஜமால்தீன், தமுமுக நகரத் தலைவா் முகமது, தி.க. நகரத் தலைவா் சரவணன், திராவிடா் விடுதலைக் கழக நகரத் தலைவா் சாமிநாதன், காங்கிரஸ் நகர துணைத் தலைவா் கே.சிவக்குமாா், மாவட்ட இளைஞரணி தலைவா் சதீஷ் தனபால், நகர பொருளாளா் ஆா்.சிவராஜ், நகர பொதுச் செயலா் சுப்பிரமணி, நிா்வாகிகள் மனோகரன், கோகுல்நாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த அனைத்துக் கட்சி நிா்வாகிகள், முக்கியச் சாலைகள் வழியாக பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ஊா்வலமாக சென்றனா். தொடா்ந்து, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT