நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 15 காசுகள் குறைந்து ரூ.3.35-ஆக நிா்ணயிக்கப்பட்டது.
நாமக்கல் மண்டல அளவிலான தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் பி.செல்வராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மற்ற மண்டலங்களில் முட்டை விலை குறைக்கப்பட்டு வருவதால், வியாழக்கிழமைக்கான விலையில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.3.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.77-ஆக நிா்ணயிக்கப்பட்டது.