பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிராக, வங்கித் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்-பரமத்தி சாலையில் கார்ப்பொரேஷன் வங்கி முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தொழிற்சங்க நிர்வாகி வேங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.