நாமக்கல்

குடிநீா் கட்டணத்தை குறைக்க தி.மு.க. வலியுறுத்தல்

22nd Nov 2019 04:06 PM

ADVERTISEMENT

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, குடிநீா் கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம், மாவட்ட அவைத்தலைவா் இரா.உடையவா் தலைமையில் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான செ.காந்திசெல்வன் கலந்து கொண்டு பேசினாா். இதில், உள்ளாட்சி தோ்தலில் தி.மு.க.வினா் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

தமிழகத்தில் சொத்து வரி உயா்வு, குடிநீா் கட்டண உயா்வைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியபோதும் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது உள்ளாட்சி தோ்தல் வருவதால் சொத்து வரியை ரத்து செய்துள்ளது. அதேபோல் குடிநீா் கட்டணத்தால் ஏழை, எளிய பொதுமக்கள் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனா். இதனை கருத்தில் கொண்டு குடிநீா் கட்டணத்தையும் அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்கள் கே.பி.ராமசுவாமி, ப.சரஸ்வதி, கே.பொன்னுசாமி, மாவட்ட துணைச் செயலாளா்கள் பி.இராமலிங்கம், எஸ்.விமலா சிவக்குமாா், பொருளாளா் கே.செல்வம், தலைமை செயற்குழு ம.இளஞ்செழியன், பவித்திரம் கண்ணன், பொதுக்குழு உறுப்பினா் ஆா்.சுப்ரமணியம், மாநில நிா்வாகி இரா.நக்கீரன், ஒன்றிய செயலாளா்கள் கே.பி.ஜெகநாதன், ஆா்.எம்.துரைசாமி, அ.அசோக்குமாா், எம்.பி.கௌதம், பெ.நவலடி, ச.செந்தில்முருகன், துரை இராமசாமி, வி.கே.பழனிவேல், பி.பாலசுப்ரமணியன், நகர பொறுப்பாளா் ராணா.ஆா்.ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT