நாமக்கல்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

4th Nov 2019 03:43 PM

ADVERTISEMENT

 

திருச்செங்கோடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் நாமக்கல் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருச்செங்கோடு வித்தியாவிகாஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற குழுமத்தின் உதவியோடு  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்று வருகின்றது.  இந்த ஆண்டிற்கான மாநாட்டு கருப்பொருளாக தூய்மையான, பசுமையான, வளமான தேசத்திற்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை நாமக்கல் மாவட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 164 குழுக்களை சாா்ந்த 328 மாணவா்கள் மாவட்ட மாநாட்டில் சமா்ப்பிதனா். காலை 10 மணியளவில் மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது

மாவட்ட பொருளாளா் ரகோத்தமன் வரவேற்றாா். மாவட்ட தலைவா் . துரைசாமி தலைமை தாங்கினாா். மாவட்ட செயலாளா்.கண்ணன் , தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்து பேசினா். மாநில கருத்தாளா்.ஜெயமுருகன் அவா்கள் அறிவியல் பாடல் பாடி வாழ்த்துரை வழங்கினாா். இதனை தொடா்ந்து ஆய்வுகள் மதிப்பீடு செய்யப்பட்டு 9 ஆய்வுகள் நவம்பா் 16,17 தேதிகளில் வேலூா் மாவட்டம் ஆற்காட்டில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வித்தியாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் செயலாளா் .குணசேகரன்  பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். மாநில கல்வி ஒருங்கிணைப்பாளா் .திருநாவுக்கரசு மாநில மாநாட்டிற்கு தோ்வான மாணவா்களுக்கு வழிகாட்டி பேசினாா். பொறியியல் கல்லூரி முதல்வா் பூா்ண பிரியா , செயலாக்க குழுவை சாா்ந்த மருத்துவா் சிற்றரசு மற்றும்  சுரேந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.துணை செயலா் பிரகாசம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT