நாமக்கல்லில் காவல் ஆய்வாளர் வாகனம் மோதியதில் தனியார் கல்லூரி ஆசிரியர் படுகாயமடைந்தார்.
சேலம் மாவட்டம், ஓமலுôரைச் சேர்ந்தவர் ஆனந்த் (27). கல்லூரி ஆசிரியர். இவர் நாமக்கல் - மோகனுôர் சாலையில் உள்ள திருநகரில் வசித்து வருகிறார். சனிக்கிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் பாரத ஸ்டேட் வங்கி வழியாகச் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக நாமக்கல் காவல் ஆய்வாளர் பெரியசாமி, தனது வாகனத்தில் வந்துள்ளார். அந்த வாகனத்தை ஓட்டுநர் வெங்கடாசலம் (35) ஓட்டி வந்தார். திடீரென எதிர்பாராதவிதமாக, இருசக்கர வாகனம் மீது காவல் ஆய்வாளரின் வாகனம் மோதியது. இதில், கல்லூரி ஆசிரியர் ஆனந்த் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.