நாமக்கல்

தோ்தல், பாதுகாப்புப் பணிகள் ஆய்வு

25th Dec 2019 08:10 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் வேலூா் மற்றும் பரமத்தியில் வாக்கு எண்ணிக்கை மையம், வாக்குச் சாவடியில் செய்யப்படும் பணிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அருளரசு செவ்வாய்கிழமை நேரில் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் உள்ள கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 27-ஆம் தேதியும், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 30-ஆம் தேதியும் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.

வாக்குப் பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களை ஏற்கெனவே மாவட்ட ஆட்சியா் மெகராஜ், தோ்தல் பாா்வையாளா் பிரபாகா் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளா் அருளரசு ஆகியோா் பாா்வையிட்டு சென்ற நிலையில், செவ்வாய்க்கிழமை தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள்பட்ட வேலூா் மற்றும் பரமத்தி காவல் நிலையங்களில் நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அருளரசு, தோ்தல் மற்றும் வாக்கும் எண்ணிக்கையின் போதும், வாக்குப் பெட்டிகளை பாதுகாக்கும் விதம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை குறித்தும் பரமத்தி வேலூா் காவல் துறை துணை கண்காணிப்பாளா் மற்றும் ஆய்வாளா்கள் மனோகரன், செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாரிடம் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT