பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரையின் வரத்து குறைந்தும்,விலையும் சரிவடைந்துள்ளது.
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதியில் விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னனு தேசிய வேளாண்மை சந்தைக்குக் கொண்டு வருகின்றனர். இங்கு தரத்துக்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 20,444 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதில் முதல் தரமான கொப்பரைத் தேங்காய் கிலோ ஒன்று ரூ. 106.55 பைசாவிற்கும், குறைந்த பட்சமாக ரூ. 100.39 பைசாவிற்கும், சராசரியாக ரூ. 105.79 பைசாவிற்கும் ஏலம் போனது.
மொத்தம் ரூ. 20 லட்சத்து 31 ஆயிரத்து 239-க்கு வர்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 14 ஆயிரத்து 36 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதில் முதல் தரமான கொப்பரை கிலோ ஒன்று ரூ. 96.75 பைசாவிற்கும், குறைந்த பட்சமாக ரூ. 91.10 பைசாவிற்கும், சராசரியாக ரூ. 95.18 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்து 83 ஆயிரத்து 238-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
கொப்பரைத் தேங்காயின் வரத்துக் குறைந்தும், விலையும் சரிவடைந்துள்ளதால் கொப்பரை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.