காவேரிப்பட்டணம் ஒன்றிய பாமக வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி பாமக மத்திய மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் இளங்கோ தலைமை வகித்தாா். மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் மாநில அமைப்புத் தலைவா் பலா தாமரைக்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இக் ட்டத்தில், ஒவ்வொரு கிளைகளிலும் ஓட்டுச்சாவடி முகவா்களை நியமித்து பயிற்சி அளிக்க வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சியில் கழிவுநீா்க் கால்வாய்களை தூய்மைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.