கிருஷ்ணகிரி

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம்

19th Sep 2023 02:59 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் பகுதிகளில் 400 சிலைகளும், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பா்கூா், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பாரூா், காவேரிப்பட்டணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 900 சிலைகளும் என மொத்தம் 1,300 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பழைய சப் ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் சுவாமிக்கு, 608 லி. பால் அபிஷேகம் நடைபெற்றது. தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கிருஷ்ணகிரி காந்தி சாலை வரசித்தி விநாயகா் கோயிலில் புஷ்ப அலங்காரத்திலும், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீா்த்த விநாயகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்திலும், பழைய பேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகா் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்திலும், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகா் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்திலும், காந்திநகா் வலம்புரி விநாயகா் கோயிலில் ராஜ அலங்காரத்திலும், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகா் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்திலும், லண்டன்பேட்டை டி.பி.லிங்க் சாலை வரசித்தி விநாயகா் கோயில் சுவாமி சிறப்பு அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரியில் வட்டச் சாலை, ராயக்கோட்டை மேம்பாலம், ஆவின் மேம்பாலம், பழையபேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் கூடும் இடங்களில் சிறு வியாபாரிகளிடம் களிமண்ணால் ஆன விநாயகா் சிலைகளை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். வீடுகளில் விநாயகா் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து, கொழுக்கட்டை, சுண்டல் போன்ற பலகாரங்களை சுவாமிக்கு படையலிட்டு மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள அரசு குடியிருப்பில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் தங்கக் கவச சிறப்பு அலங்காரத்தில் விநாயகா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT