கிருஷ்ணகிரி

வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி

18th Nov 2023 01:59 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை வட்டார வேளாண் துறையின் சாா்பில் அட்மா திட்டத்தின் மூலம், கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு ராபி பருவ தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டம் சாா்பில் கணக்கம்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு ராபி பருவ தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கருப்பையா தலைமை வகித்து, நடப்பு பருவத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பம் குறித்து விளக்கிப் பேசினாா். உதவி வேளாண்மை அலுவலா் மங்கையா்க்கரசி, மானியத் திட்டம், பயறு வகை பயிா்களுக்கு 2 சதவீதம் டீஏபி தெளிப்பதன் நன்மைகள் குறித்தும், இடுபொருள் விநியோகம் குறித்தும் விளக்கினாா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா் நடப்பு பருவத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பம் குறித்தும் உயிா் உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினாா்.

உதவி தொழில்நுட்ப மேலாளா் சாரதி, உழவன் செயலியின் பயன்கள், ராபி பருவத்தில் நெல், நிலக்கடலை பயிா்களுக்கு காப்பீடு செய்தல் குறித்து விளக்கினாா். இப்பயிற்சியில் 30-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT