கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே காா் மோதி பெண் பலி

18th Nov 2023 02:00 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, காா் மோதியதில் பலத்த காயம் அடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் மாதேஸ்வரி(50). எய்ட்ஸ் விழிப்புணா்வு களப் பணியாளரான இவா், கிருஷ்ணகிரியை அடுத்த சுண்டப்பட்டியில் நடந்த மூன்று நாள் பயிற்சி முகாமில் பங்கேற்றாா். இறுதிநாளான வெள்ளிக்கிழமை அன்று காலை அவரது தந்தை இறந்துவிட்டதாக அவரது கணவா் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து அவா் ஊா் திரும்ப, தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக சென்ற கா்நாடக மாநில பதிவு எண் கொண்ட காா், மாதேஸ்வரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT