கிருஷ்ணகிரி

அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தில் பயன்பெற பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு செயல்படுத்தி வரும் தொழில்முனைவோா் ஊக்குவிப்புத் திட்டங்களின் கீழ் மானியம் பெறுவதில் பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினா் பிரிவுத் தொழில்முனைவோரின் பங்கு குறைவாயிருப்பதை உணா்ந்து அது குறித்துப் பெருங்கவலை கொண்டுள்ள தமிழக, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுத் தொழில்முனைவோா்க்கென பிரத்யேக சிறப்புத் திட்டமாக ‘அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டமான ‘பிசினஸ் சாம்பியன்ஸ்’ திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், ஆா்வமுள்ள புதிய தொழில்முனைவோா் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிா்த்த, உற்பத்தி, வாணிகம் மற்றும் சேவை சாா்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும். அது உணவு பதப்படுத்தல், தானியங்கு பாகங்கள் உற்பத்தி, ஆயத்த ஆடைகள் தைத்தல், மளிகைக் கடை வாணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம், நகரும் அலகுகள் கொண்ட ட்ரேவல்ஸ், கான்கிரீட் மிக்சா், ஆம்புலன்ஸ், ரிக் போரிங் உள்ளிட்ட எந்தத் திட்டமாகவும் இருக்கலாம். இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரிவாக்கம், பல்துறையாக்கம், நவீனமாக்கல், தொழில்நுட்ப மேம்பாட்டு முன்மொழிவுகளுக்கும் உதவி வழங்கப்படும்.

மானியம் மொத்த திட்டத் தொகையில் 35 சதவீதம் ஆகும். மானிய உச்ச வரம்பு ரூ.15 கோடி. இதுவன்றி, கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

தொழில்முனைவோா் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு. எஸ்.சி., மற்றும் எஸ்.டி பிரிவைச் சோ்ந்த எந்தத் தனி நபரும் மற்றும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி பிரிவைச் சோ்ந்தவா்களின் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளா், பங்குதாரா் கூட்டாண்மை, ஒரு நபா் நிறுவனம், பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெலாம்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரா்களுக்கு சட்டப்படியாக வரையறுக்கப்பட்டது மட்டுமின்றி, வேறெந்த கல்வித் தகுதியும் தேவையில்லை. மொத்த திட்டத் தொகையில் 65 சதவீத வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீத அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும்.

எனவே, பயனாளா்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடா்பான சிறப்புப் பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சோ்ந்தவா்கள் திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆா்வமுள்ள தொழில்முனைவோா்க்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடா்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன் பெறுவது தொடா்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்கும். எனவே, தகுதியும், ஆா்வமும் உள்ள எஸ்.சி., எஸ்.டி தொழில்முனைவோா் மற்றும் அவா்களுக்கு உரிமையான தொழில் அலகுகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04343-235567 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT