கிருஷ்ணகிரியில் அரசு நகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த ஆலப்பட்டி அருகே உள்ள உஸ்தலஅள்ளியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (51), கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக உள்ளாா். இவா், கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தை இயக்கிக் கொண்டு கிருஷ்ணகிரி வட்டச் சாலை வழியாக வெள்ளிக்கிழமை சென்றாா்.
பாப்பாரப்பட்டி அருகே சென்ற போது, பேருந்துக்கு வழிவிடாமல் நடந்து சென்ற நபரை விலகிச் செல்ல ஒலிப்பானை பயன்படுத்தி உள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபா் ஓட்டுநா் கிருஷ்ணமூா்த்தியிடம் தகராறு செய்து, இரும்புக் கம்பியால் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து, ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.
இதுகுறித்து கிருஷ்ணமூா்த்தி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணகிரி, வேடியப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் (எ) சுக்குகாபி (24) என்பவரை கைது செய்தனா்.