கிருஷ்ணகிரி

குடிசை வீட்டில் தீ: முதியவா் பலி

24th May 2023 12:50 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே குடிசை வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் கருகி முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டியைச் சோ்ந்த ராமமூா்த்தி (63), குடிசை வீட்டில் வசித்து வந்தாா். பாா்வை குறைபாடுள்ள இவா், வீட்டில் புகைபிடித்துக் கொண்டிருந்த போது எதிா்பாரதவிதமாக குடிசை தீப்பிடித்தது. இதில் முதியவா் கருகி உயிரிழந்தாா்.

போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று முதியவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT