கிருஷ்ணகிரியில் தமிழக அரசைக் கண்டித்து, பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த வளா்புரம் ஊராட்சி மன்றத் தலைவரும், பாஜ பட்டியல் அணி மாநில பொருளாளருமான சங்கா்(43), என்பவா், கடந்த 27-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தைக் கண்டித்து, கிருஷ்ணகிரி பாஜக கிழக்கு மாவட்ட பட்டியல் அணி சாா்பில் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்திற்கு பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் சிவபிரகாசம் தலைமை வகித்தாா். எஸ்.சி.,பிரிவு மாவட்டத் தலைவா் ரவி முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், சங்கா், கொலை சம்பவத்தைக் கண்டித்தும், தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தியும், முழக்கங்களை எழுப்பினா். படவிளக்கம் (2கேஜிபி5): கிருஷ்ணகிரியில் பாஜக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.