கைது செய்யப்பட்டவரை அவரது வாகனத்திலே அழைத்துச் சென்ற ஒசூா் காவலா்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம்நகா் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக ராம்நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்பவா் கடந்த 11-ஆம் தேதி ஒசூா் நகர போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில் ஒசூா் மாநகர சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் செல்வம், போலீஸாா் சரவணன் ஆகியோா் காா்த்திக்கை காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு காா்த்திக்கின் சொந்த காரிலேயே அழைத்துச் சென்றனராம். பின்னா் கிளை சிறைக்கும் அதே காரில் அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பான விடியே சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவம் சா்ச்சையானதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா் விசாரணை நடத்தினாா். இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வம், ஏட்டு சரவணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.