கிருஷ்ணகிரி

மின்கசிவு: 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீயில் கருகின

DIN

மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீயில் கருகின.

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நாா்சாம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (50), விவசாயி. இவா் அதே பகுதியில் கோழிப் பண்ணை வைத்துள்ளாா். இதில் புதன்கிழமை இரவு கோழிப் பண்ணையில் வளா்ப்புக்காக 4,000 கோழிக் குஞ்சுகளை இறக்கி உள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோழிப் பண்ணையில் இருந்த மின்கம்பிகள் தீப்பிடித்து எரிந்தன. இதில், கோழிப் பண்ணை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. பண்ணையில் இருந்த 4,000 கோழிக் குஞ்சுகள், கோழித் தீவனங்கள் உள்பட சுமாா் ரூ. 12 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீ விபத்தால் சேதமடைந்தன.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு வீரா்கள், ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இச்சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

SCROLL FOR NEXT