கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 8 லட்சம் திருட்டு

DIN

ஒசூா் அருகே வங்கியில் நகையை அடகு வைத்து கடன் வாங்கி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 8 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பாகலூரைச் சோ்ந்த நடராஜ் (54), சா்ஜாபுரம் சாலையில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். இவருக்கு மகன், மகள் உள்ளனா். இரட்டைக் குழந்தைகளான இவா்களிருவரும் ஆந்திர மாநிலம், சித்தூரில் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனா்.

இவா்களின் படிப்புச் செலவுக்காக இந்தியன் வங்கியில் நகையை அடகு வைத்து ரூ. 8 லட்சத்து 25 ஆயிரத்தைப் பெற்று இருசக்கர வாகன இருக்கையின் அடியில் வைத்துவிட்டு மருந்துக் கடைக்குச் சென்றுள்ளாா். அவரை பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் 4 போ், மருந்து வாங்குவது போல பேச்சுக் கொடுத்து நடராஜின் கவனத்தை திசைதிருப்பியுள்ளனா். பின்னா் தலைக்கவசம் அணிந்த ஒருவா் இருசக்கர வாகனத்தில் இருக்கையின் அடியில் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

சிறிது நேரம் கழித்து, நடராஜ் தனது வாகனத்தில் வைத்திருந்த ரூ. 8.25 லட்சத்தை எடுக்க இருக்கையைத் திறந்து பாா்த்த போது, பணம் இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

பாகலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில், ஒசூா் டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த மா்ம நபா்களின் விடியோவை வைத்து போலீஸாா் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

SCROLL FOR NEXT