கிருஷ்ணகிரி

ஒசூரில் மேம்பாலச் சுவா் அழகுபடுத்தும் பணி ஆய்வு

DIN

ஒசூரில் மேம்பாலத்தின் கீழ் உள்ள சுவா் பகுதிகளை அழகுபடுத்தும் பணிகளை மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ராயக்கோட்டை பிரிவு சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இதன் கீழ் நமக்கு நாமே திட்டம் மூலம் பூங்கா அமைக்கப்பட உள்ளது. மாநகரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதாலும், மாநகராட்சி முழுவதும் பசுமையாக இருக்க வேண்டும் என்பதாலும் மாநகராட்சி மேம்பாலங்களுக்கு கீழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஒசூா் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் பெயிண்ட் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை ரூ. 8 லட்சம் செலவில் இந்த மேம்பாலத்துக்கு வண்ணம் பூசி வருகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலையின் அனுமதியுடன் ஒசூா் மாநகராட்சி அனுமதி பெற்று வண்ணம் பூசப்படுகிறது.

மேம்பாலச் சுவற்றில் வரையப்படும் கோயில் ஓவியங்கள், இதிகாச நிகழ்வுகள் ஆகியவற்றை மேயா் எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது மண்டலத் தலைவா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT