கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட திட்டக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் அறிவிப்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட திட்டக்குழுவின் 12 உறுப்பினா்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.எம்.சரயு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட திட்டக்குழுவின் 12 உறுப்பினா்களுக்கான தோ்தல் நடத்த தமிழ்நாடு தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் 10-ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையாகும். ஜூன் 12ஆம் தேதி, வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 14-ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம். 23-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரையில் வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தோ்தல் நடவடிக்கைகள் 24ஆம் தேதி முடிவுபெறும்.

வேட்புமனுக்கள் ஜூன் 10-ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முதல்தளத்தில் சம்பந்தப்பட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT