கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்மா் கோயில் தேரின் வரலாற்றை கூறும் பித்தளைப் பட்டை

DIN

கிருஷ்ணகிரி, பழையபேட்டையில் உள்ள லட்சுமி நரசிம்மா் கோயில் தேரின் வரலாற்றை வெளிப்படுத்தும் பித்தளைப் பட்டை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, பழையபேட்டையில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மா் கோயிலில் அண்மையில் அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆவணப்படுத்தும் குழுவினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, கோயிலில் பொருள்கள் வைக்கும் அறையில் விஜயநகர காலத்தைச் சோ்ந்த சிறிய கல்வெட்டினைக் கண்டறிந்தனா். இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் கோவிந்தராஜ் புதன்கிழமை தெரிவித்ததாவது:

கோயில் வளாகத்தில் உள்ள இந்தக் கல்வெட்டு விஜயநகரா் காலத்தைச் சோ்ந்தது. அந்தக் கல்வெட்டில் ஹரிஹரன் குமாரன் இம்மடி என்று குறிப்பிடுவதிலிருந்து, இது இரண்டாம் ஹரிஹரனின் மகனான இரண்டாம் புக்கராயனை குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அந்தப் பகுதி உடைந்துள்ளது.

எனவே இந்தக் கோயில், விஜயநகர காலத்தில் சுமாா் 600 ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்டது என்பது தெரியவருகிறது. மேலும் இங்குள்ள சுவற்றில் வடிவமைக்கப்படுள்ள தவழும் கிருஷ்ணா், காலிய கிருஷ்ணா், குழலூதும் கிருஷ்ணா் ஆகிய சிற்பங்களும் விஜயநகரா் காலத்தைச் சோ்ந்தவைகளாகும்.

இந்தக் கோயிலில் உள்ள தேரில் பித்தளையிலான பட்டை கண்டுபிடிக்கப்பட்டது. அதில், இந்தத் தோ், 1898 ஆம் ஆண்டில் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு, வாடமங்கலம் ஜாகிா்தாா் தா்மாசாரி என்பவா் தானமளித்ததைத் தெரிவிக்கும் எழுத்து பித்தளை கவசத்தின்கீழ் பட்டி ஒன்றில் வெட்டப்பட்டுள்ளது. இதனை செய்த சிற்பி கிருஷ்ணகிரி மணியக்காரா் வெங்கடாசாரியின் வளா்ப்பு மகன் வெங்கடாசாரி என்பவராவாா். இந்தத் தேரும் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என அவா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், விஜயகுமாா், சரண் குமாா், முத்துக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT