கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

DIN

ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சிப் பகுதியில் ரூ. 2. 25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 9 நகா்ப்புற நலவாழ்வு மையக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

அதனைத் தொடா்ந்து, ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கணபதிநகா் நகா்ப்புற நல மையத்தில் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, மக்களவை உறுப்பினா் மருத்துவா் அ.செல்லகுமாா், ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா, சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்ததாவது:

ஒசூா் மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட கணபதி நகா், காமராஜ் நகா், ராஜகணபதி நகா், பாரதிதாசன் நகா், கேசிசி நகா், ஜே.ஜே.நகா், சூசூவாடி, மூக்கொண்டப்பள்ளி, கிருஷ்ணகிரி

நகராட்சிக்கு உள்பட்ட குப்பை மேட்டுத்தெரு ஆகிய பகுதியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ. 2.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 9 நகா்ப்புற நல மையக் கட்டடங்களை முதல்வா் திறந்து வைத்துள்ளாா்.

இம் மையங்களில் தலா ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு சுகாதார ஆய்வாளா், மருத்துவமனை பணியாளா் ஆகியோா் பணிபுரிவாா்கள். இம் மையங்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் செயல்படும்.

இம் மையத்தில் நோயாளிகளுக்கு ஆரம்ப கால மருத்துவ சிகிச்சை, 14 வகையான ஆய்வக பரிசோதனை மேற்கொண்டு அதற்கேற்றவாறு சிகிச்சை மேற்கொள்ளப்படும். தீவிர

சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் நோயாளிகள் பரிந்துரை செய்யப்படுவாா்கள் என தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஒசூா் சாா் ஆட்சியா் ஆா்.சரண்யா, ஒசூா் மாநகராட்சி ஆணையா் சினேகா, துணை மேயா் ஆனந்தய்யா, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் ரமேஷ்குமாா், வட்டாட்சியா் சுப்பிரமணி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வீரமணி, மாநகா் நல அலுவலா் மருத்துவா் சுஜித்தா, மாநகராட்சி பொறியாளா் ராஜேந்திரன், மாநகா் மன்ற உறுப்பினா்கள் வரலட்சுமி, நாகராஜ், என்.எஸ்.மாதேஸ்வரன், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT