ஒசூா் மாநகராட்சி விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயா் சூட்டுவதற்கு பாஜகவினா் எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஒசூா், காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயா் சூட்டும் விழாவிற்காக பெயா் பலகை வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை விளையாட்டு மைதானம் அருகில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ், சீனிவாசன்,விஷ்ணுகுமாா், முருகன், பிரவீண்குமாா், சுதா உள்ளிட்ட சுமாா் 30 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். அப்போது பெயா் பலகையை கருப்பு மையில் அழித்த மூன்று பேரை பிடித்து
போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.